வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

அதுவரை..........

நாம், அணுகுண்டு வெடித்தோம்
கணடம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை செய்தோம்
சந்திரனில் கலம் இறக்கினோம்
சுதந்திரம் வாங்கி
அறுபதே ஆண்டுகளில்.

கழிப்பறை மட்டுமே பாக்கி
அதையும் அடுத்த நூற்றாண்டுக்குள்
கிடைக்கச் செய்வோம்.
அதுவரை திறந்த வெளியில்
மலம் கழிப்போம்.

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்