செவ்வாய், 19 மே, 2020

மனிதாபிமானம்


புலம்பெயர் தொழிலாளிகள்
      அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்

கொரோனாயணம்


தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்
என்றான் கடவுள்

தும்மலிலும் இருப்பேன்
தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா

நம்மளை கை கழுவ சொன்ன 
அரசாங்கம்
நம்மளை கை கழுவியது

நம்ம வீட்டிலே இருந்தால்
கோரோனா வீதியில்  இருக்கும்
நாம் வீதிக்கு வந்தால்
கொரோனா நம் வீட்டுக்கு  வரும்

மாடத்தில் விளக்கு ஏத்த
நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அணைக்க சொன்னார்
   
சத்தமா சாப்பாட்டு தட்டை
தட்ட சொல்லி
சத்தமில்லாமல் நம்மக்கு
திருஓட்டை தந்துசென்றார்

ஊரெல்லாம் அடங்கிக்கிடந்தது
தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி  வெறி முழித்தே இருந்தது

தேசிய ஊரடங்கில் பணக்காரர்கள்
ராமாயணம் பார்த்தார்கள் 
ஏழைகள் பசியை தின்றார்கள்

வறுமையோடு வாழ்பவர்களை
வைரஸ் சாகும்வரை
வைரசோடும் வாழ சொன்னார்கள்
   
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்
நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு விமானம்சேவை

ஊருக்குள்ளே நல்ல ஊர்
எங்க ஊர்
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்க நாடு
பால்ராஜன் ராஜ்குமார்