ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கொரோனாயணம்

தூணிலும் இருப்பேன்
     துரும்பிலும் இருப்பேன்
என்றான் கடவுள்

தும்மலிலும் இருப்பேன்
    தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா
 
மாடத்தில் விளக்கு ஏத்த
     நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அண்ணைத்து விட்டார்கள்
   
சத்தமா சாப்பாட்டு தட்டை
      தட்ட சொல்லி
சத்தமில்லாமல் நம்மக்கு
      திருஓட்டை தந்துசென்றார்கள்
 
நம்மளை கை கழுவ சொன்ன 
     அரசாங்கம்
நம்மளை கை கழுவியது
 
ஊரெல்லாம் அடங்கிக்கிடந்தது
     தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி  வெறி முழித்தே இருந்தது
 
தேசிய ஊரடங்கில் பணக்காரர்கள்
     ராமாயணம் பார்த்தார்கள் 
ஏழைகள் பசியை தின்றார்கள்
 
வறுமையோடு வாழ்பவர்களை
     வைரஸ் சாகும்வரை
வைரசோடும் வாழ சொன்னார்கள்
   
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்
     நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு விமானம்சேவை
 
நம்ம வீட்டிலே இருந்தால்
     கோரோனா வீதியில்  இருக்கும்
நாம் வீதிக்கு வந்தால்
    கொரோனா நம் வீட்டுக்கு  வரும்

மனிதாபிமானம்

புலம்பெயர் தொழிலாளிகள்
        அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்
பால்ராஜன் ராஜ்குமார்