புதன், 18 ஏப்ரல், 2012

தொடர்வது

அழுகை சத்தம் கேட்கின்றது
வாசல் கதவை மூடிவிடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
ஜன்னல்களையும் மூடிவிடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
அறைக்குள் சென்று விடுகின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
படுக்கை விரிப்பால் போர்த்தி கொள்கின்றேன்
அழுகை சத்தம் கேட்கின்றது
அழுவது நானாகக்கூட இருக்கலாம்.


பால்ராஜன் ராஜ்குமார்