சனி, 26 பிப்ரவரி, 2011

தீ குளித்த நெருப்பு

கொடும்பாவி கொளுத்தினாய்
பிரியாணி பொட்டலம்
கொடுத்தார்கள் உனக்கு

உன் தலைவன்
அனல் தெறிக்க
அதிக பிரசங்கியாய் பேசி
சிறை பட்டான்.
பேருந்துக்கு தீ பொறியிட்டாய்
பேருந்து பற்றி எரிந்தது
வீரன் என்று சொன்னர்கள் உன்னை

இன்று கோழையாய்
உன்னையே கொளுத்தி கொண்டாய்
நெருப்பு தீ குளித்ததாய் சொல்லி
உன் புகைப்படத்துக்கு மாலையிட்டார்கள்
மாவீரன் என்று மார்தட்டினார்கள்

மாலைக்கா பஞ்சம் நாட்டிலே....
உன் தலைவன்
அனல் தெறிக்க
பேசுகின்றான்
அடுத்த மாவீரனை கண்டெடுக்க!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்