புதன், 20 ஜூலை, 2011

பம்பாய் முதல் மும்பாய் வரை

வருடா வருடம் வருடபிறப்பு
தவறாமல் ஊரில் குண்டு வெடிப்பு
வன்முறையே வாழ்கை
முறையானதா?

வேலைக்கு சென்ற அப்பா
வீடு திருபம்பாவிட்டால்
பிள்ளைக்கு தெரியும்
அப்பா வெடிகுண்டுக்கு பலி என்று

தெருவில் இரைந்து கிடந்தார்கள்
இரைந்து கிடந்த எல்லோரும்
இறத்து கிடந்தார்கள்

அடித்து நொறுக்கி
தரைமட்டமானது தர்க்கா
வீழ்ந்தது என்னவோ
மனித நேயம்தான்

இடித்த கடப்பாரைகளுக்கும்
வெடித்த குண்டுகளுக்கும்
எங்கே இதயம் இருக்கின்றது

ரதயாத்திரையின் தடத்தில்
ரத்த யாத்திரைதான்
ஆறுதல் சொன்ன
அரசியல் தலைவர்கள்
மும்பய் கோவை என
தீவிரவாதத்தை
தேசியவாதமாகிவிட்டார்கள்

உயிரற்ற உடல்கள் எல்லாம்
உடைத்து நொறுக்கப்பட
பாப்ரி மசூதியின் செங்கற்களா?
பால்ராஜன் ராஜ்குமார்