திங்கள், 30 நவம்பர், 2015

ஏன் இவர்கள் இப்படி?



எத்தனை தடவை
  அலைகள் அழைத்தாலும்
கரைகள் போவதில்லை
  கடலுக்குள்

எல்லோருக்கும்
  வழிசொல்லும்
வழிகாட்டி பலகைமட்டும்
  யாருடனும் பயணிப்பதில்லை

ஊரின் பெயர் பலகை
   வருவோரை வரவேற்றது
அதுமட்டும் ஊருக்குள்
   வரவேயில்லை

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பேச்சு



பொய் பேசுவாயா?
   ’ஆம்’ என்று 
சொன்னேன்.
    நான் பேசுவது
உண்மையா? பொய்யா?

ஆபரணம்



நம்மூரில்
   புன்னகைகூட
அணியமாட்டர்கள்
    விதவைகள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஞாபகம்


மரத்தை சுமப்பதை 
   விதைகள்
மறந்தா போகும்
பால்ராஜன் ராஜ்குமார்