ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கொரோனாயணம்

தூணிலும் இருப்பேன்
     துரும்பிலும் இருப்பேன்
என்றான் கடவுள்

தும்மலிலும் இருப்பேன்
    தொண்டையிலும் இருப்பேன்
என்றார் கொரோனா
 
மாடத்தில் விளக்கு ஏத்த
     நம்ம வீட்டில் எரிந்த விளக்கை
அண்ணைத்து விட்டார்கள்
   
சத்தமா சாப்பாட்டு தட்டை
      தட்ட சொல்லி
சத்தமில்லாமல் நம்மக்கு
      திருஓட்டை தந்துசென்றார்கள்
 
நம்மளை கை கழுவ சொன்ன 
     அரசாங்கம்
நம்மளை கை கழுவியது
 
ஊரெல்லாம் அடங்கிக்கிடந்தது
     தெருவெல்லாம் முடங்கிக்கிடந்தது
சாதி  வெறி முழித்தே இருந்தது
 
தேசிய ஊரடங்கில் பணக்காரர்கள்
     ராமாயணம் பார்த்தார்கள் 
ஏழைகள் பசியை தின்றார்கள்
 
வறுமையோடு வாழ்பவர்களை
     வைரஸ் சாகும்வரை
வைரசோடும் வாழ சொன்னார்கள்
   
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்
     நடை பிணங்களாக சாலைகளில்
நாய்குட்டிகளுக்கு விமானம்சேவை
 
நம்ம வீட்டிலே இருந்தால்
     கோரோனா வீதியில்  இருக்கும்
நாம் வீதிக்கு வந்தால்
    கொரோனா நம் வீட்டுக்கு  வரும்

மனிதாபிமானம்

புலம்பெயர் தொழிலாளிகள்
        அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்

ஒவ்வொரு அடியிலும்
      நசுங்கி செத்தது
மனிதாபிமானம்

ஞாயிறு, 19 ஜூலை, 2020

முதிர் கன்னிகள்

இருபது வயதில்
    நிகழ்காலத்தில்
எதிர் கால கனவுகள்

நாற்பது வயதில்
    நிகழ் காலமே
இறந்த காலமாகிவிடும்

துணையை இழந்தால்
    வாழா வெட்டி
துணையே கிடைக்காவிடில்
    வாழ்வே வெட்டி

ஞாயிறு, 5 ஜூலை, 2020

ஃபேஷன்

சரிவுப்பாதை
     மாடல் நடந்து வந்தாள்
அவள் உடம்பொல்லாம்
     பார்வையாளர்களின்
கண்கள்
     ஒட்டிக்கொண்டன

கடலலைகள்

யாரங்கே
      மடித்து மடித்து
கரையில் வைத்த
      அலைகளை
கலைத்துவிடுவது

அப்பாவான மகன்

இரண்டு வயதில்
     நான் நீயாக
ஆசைப்பட்டேன்
     உன் சட்டையை அணிந்து
உன் செருப்பின் கட்டைவிரலில்
     காலையே நுழைத்து
நான் நீயானேன்

கற்பமாகாத இறகுகள்

அவள் படிப்பற்க்காக
     ஆங்கில புத்தகத்தை
அத்தனை முறை திறந்ததில்லை
     இன்று மட்டும்
பலமுறை பார்த்துவிட்டாள்
     நேற்று வைத்த மயிலிறகு
குட்டி போட்டதா என்றறிய

இருள்

பகலைக் காண
     இரவெல்லாம்
காத்திருந்தும்
     பகல் வந்ததும்
பார்க்காமல்
     போய்விட்டது இருள்

அடி

கிடந்த இலைமேல்
     விழுந்த இலை
மொதுவாய் கேட்டது 
     அடி பட்டதா? என்று

காமம்

கழிப்பரை சுவரின்
     கிறுக்கல்களும்
வாசகமும்
     சுவரில் புணரும்
சித்திரமாய்
     வழிந்துவிடுமோ
இயலாதவனின் காமம்
பால்ராஜன் ராஜ்குமார்