புதன், 28 டிசம்பர், 2011

ஒளவையாரும் போன்சாயும்

ஒளவையாரை வெளியே வரும்போதுதான் அருகில் கவனிக்க முடிந்தது. ஒரு முடி கூட மீதமில்லமல் அனைத்தும் நரைத்திருந்தது, அழுது கொண்டிருந்தார், அருகிலிருந்த பாரதியாரும் அழுது கொண்டிருந்தார். இருவருமே அவரவர்களின் அம்மாக்களின் மடியிலிருந்தார்கள். இவர்களை காந்திஜி பார்த்தார். பக்கத்தில் பாரத மாதாவும் பார்த்துக் கொண்டிருந்தார். பாரதியின் முண்டாசை கழற்றினார் அவரின் அம்மா. ”தலை வேர்திருக்கிறது. அதனால்தான் அழுகின்றான். நல்ல வேளை மேடையில் இருக்கும் போது அழவில்லை”. என்றார் பாரதியாரின் அம்மா. “ம்...” என்று ஒற்றை எழுத்தில் பதில் சொல்லிவிட்டு, நரை முடியை கழட்டுவதில் மும்முரமானார் ஒளவையாரின் அம்மா. ஒவ்வொரு ஹேர்பின்னையும் பொறுமையாக கழட்டினார். இப்போதுதான் அழுகையை நிறுத்தினார் ஒவையார்.

பள்ளியின் ஆ
ண்டுவிழாவில் பார்த்த காட்சிதான் இது. குழந்தைகளுக்கான மாறுவேட நிகழ்ச்சி. எல்லாம் ஒன்றாம் இரண்டாம் வகுப்பு குழந்தைகள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேடத்தில். குழந்தைகளை பெரியவர்களாய் வேடமிட்டு பார்ப்பதில், குழந்தையும் தெரியும் ஒளைவையாரும் தெரிவார். மாறுவேட கலை ரசிக்கக்கூடியதாயிருந்தது. இது நடந்தது ஆகஸ்ட் மாதத்தில்.

சில நாட்களுகு முன், சென்னையிலுள்ள செம்மொழி பூங்காவுக்கு ஊரிலிருந்து வந்திருந்த விருந்தினர்களுடன் செல்ல நேர்ந்தது. தமிழ் நாட்டின் ஆட்சி மாற்றம் பூங்காவிலும் தெரிந்தது. சென்றிருந்த அனைவருக்கும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தது அங்கு இருந்த போன்சாய் (Bonsai) மரங்கள்தான். இந்த சிற்றுரு (miniature) மரங்கள் ஜப்பான் / சீனாவிலிருந்து வந்த வேளாண்கலை (Art of cultivation) – வேளாண் அறிவியல் (agricultural science) அல்ல. பெருமரங்களை சிறிய அளவில் பார்ப்பதில் உள்ள சந்தோசம், ஐந்து வயது குழந்தைகளை ஒளைவையாராகவும், பாரதியாராயும் பார்பதைப் போலவே இருந்தது.

செம்மொழி பூங்காவில் போன்சாய் மரங்களை பார்க்கும் போது, எழுத்தாளர் ஷேபா டேவின் ’த வீக்’ வார இதழில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரைதான் ஞாபத்திற்க்கு வந்தது. அவரின் கட்டுரையில்.........குஜராத் பல்கலைக்கழகத்தின் Dr. ரஞ்சனா ஹரிஷ் அமைப்பாளராயிருந்து நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் பேசிய முன்னனி எழுத்தாளர்களையும் சேர்த்து அனைத்து எழுத்தாளர்களின் பேச்சும் பெண்ணின் இழிவு நிலை பற்றியதாகவே இருந்தாய் சொல்கின்றார். ஏன் தமிழ்நாட்டிலுள்ள தலித்திய எழுதாளர் பாமாவின் படைப்புக்ளும் பெண்ணின் இழிவை எடுத்துறைப்பதாய்தான் இருக்கின்றது. அப்போது Dr. ரஞ்சனா ஹரிஷின் அப்பா, பழுத்த காந்தியவதி பலவருடஙகளுக்கு முன்பு பெண்கள் பற்றி எழுதிய கவிதையை சொல்லக் கேட்டதிலிருந்து, போன்சாய் மரங்கள் என் மனதைவிட்டு அகல மறுக்கின்றன என்கின்றார். ஒரு போன்சாய் மரத்திற்க்கு எவ்வளவுதான் சூரியஒளியும், நல்ல உரமும் கிடைத்தாலும் அது சிற்றுரு அளவிலே போன்சாயாகத்தான் இருக்கும். பேருறு பெற்ற மரமாய் உருவாக கனவுகூட காணாது. அதே மாதிரிதான், பெண் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் என்னதான் உயரத்தை எட்டினாலும் ‘பெண்ணிழிவு’ பற்றியே அவர்களின் படைப்புகள் இருக்கின்றன்.

ஒப்பீட்டளவில் அருமையானதாகவும், சமுகநோக்கில் வேதனையான நிலைதான் பெண்களுக்கு – போன்சாய் மரங்களுக்கு.




1) Fancy dress picture Courtesy: Dinamalar dated 4 Dec 2011
http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=805&no=1

2) Bonsai picture Courtesy: http://en.wikipedia.org/wiki/Bonsai

3) Reference ‘The Week’ dated Dec 4, 2011



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்