செவ்வாய், 27 டிசம்பர், 2011

எலிகளின் சத்தம் (அன்னா ஹசாரே)

அன்னா ஹசாரே மீண்டும் அறைக்கூவல் (கூச்சலில்லை) விட்டிருக்கின்றார். அது மாபெரும் எழுச்சியை இந்தியாவில் உண்டாக்கியிருக்கின்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து பாக்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் வழியாக ஐரோப்பாவையும், தென்கிழக்கில் வலுப்பெற்று பர்மா, வியட்னாம் வழியாக ஆசியாவையும், ஆகமொத்தில் உலகம் முழுவதும் இந்த எழுச்சி இன்னும் சில தினங்களிலோ வாரங்களிலோ பரவும் என பன்னாட்டு தலைவர்கள் எல்லாம் நம்புகின்றார்கள். உண்மையை சொன்னால் தலைவர்கள் எல்லாம் பயந்து போயிருக்கின்றார்கள். இந்த எழுச்சிக்கான உத்தியை, சமீபத்தில் நாம் கண்கூடாக பார்த்த துனிஷ்யா, எகிப்து, சிரியா நாட்டுகளில் நடந்த புரட்சியை அன்னா ஹசாரே உற்று நோக்கி கொண்டிருந்த போது அவருக்கு மனதில் உதையமானதாய் சொல்லுகின்றார்கள்.

சரி.....சரி....என்ன அறைகூவல்? என்ன எழுச்சி?

முதலில் அறைகூவலை பார்ப்போம்.

அதாவது ......... நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள ’ஊழல் எதிர்ப்பு சட்ட மசோதா’ பலம் பொருந்தியதில்லை என்றும் அதை எதிர்த்து மக்கள் அனைவரும் ‘சிறை நிரப்பும்’ படி அன்னா ஹசாரே அறைகூவி அழைக்கின்றார்.

பல முறை நாடாளுமன்றத்திற்க்கு அதுவும் பரம்பரையாய் நாடாளுமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினகள் இந்த அறைகூவலை கேட்டு நடுங்கி போயிருக்கின்றார்கள். அன்னா ஹசாரே மேல் ஒரு விதமான பயமே வந்து விட்டது அவர்களுக்கெல்லாம். இருக்காதா பின்னே. மசோதாவை இன்னும் பிரிண்ட் செய்து உறுப்பினர்களுக்கு தரப்படவில்லை, உறுப்பினர்களுக்கு அதில் என்ன ஷரத்து இருக்கின்றது என்று தெரியாது. விவாதிக்கப்படவில்லை. திருத்தங்கள் பரிந்துரைக்கப் படவில்லை. இதற்கு முன்பே ஹசாரே, பலமில்லா சட்ட மசோதானு செல்லிட்டார்னா, என்ன ஒரு ஞான(கண்) பார்வை. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது, சட்டமன்ற உறுப்பினர்கள், முனிசிபாலிட்டி உறுப்பினர்கள்னு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் ஹசாரேமீது பயம் கலந்த மரியாதையும், சிலருக்கு மரியாதை கலந்த பயமும் தனியாகவோ கலந்தோ வந்துவிட்டது.

ஹசாரேவிட்ட அறைகூவலை கொஞ்சம் புரிவது மாதிரி தெரிகின்றது. அதனால் நாட்டில் என்ன எழுச்சி உண்டாகிவிட்டது?.

ஹசாரேவின் அறைகூவல் கேட்டவுடனே வீறுகொண்டு எழுந்து உங்கள் வீட்டிற்க்கு பக்கதிலுள்ள எதாவது சிறைச்சாலைக்கு சென்றீர்கள் என்றால் நீங்கள் ஊழலுக்கு எதிரான போராளியல்ல, ஒரு பெருச்சாளிதான் (அதாவது சந்தேகமே இல்லாமல் ஊழல் பெருச்சாளிதான்).

சிறை நிரப்பு போரட்டதிற்க்கு சிறைச்சாலைக்குதானே செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டால், உங்களை மாதிரி ஹசாரேவின் போரட்ட உத்தி தொரியதவர்களை வைத்து என்ன செய்வது? செய்திதாள் படிக்கும் பழக்கமிருந்தால் தெரிந்திருக்கும். சரி.......செல்லுகின்ற மாதிரி செய்து விடுங்கள். ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) என்ற இணைய தளதிற்க்கு சென்று கணினி எலியில் Right click செய்து சிறைசெல்ல பதிவு செய்தால் சிறைசென்ற கஷ்டத்தை பெறுவீர்கள். போராட்டமும் வலுப்பெறும்.

போராட்ட குழுவின் சிங் தன்னார்வலர் செளகான் செல்லுவதை கேளுங்களேன். “அன்னா ஹசாரே 'சிறை நிரப்பு போராட்ட’ ஆன்லைன் பிரச்சாரத்தை துவங்கி மூன்று நாட்களுக்குள் நாடு முழுவதும் இருந்து, 1.1 லட்சம் மக்கள் பதிவிட்டிருக்கின்றார்கள். இது எதிர் பார்க்காத எழுச்சி. இதை யாராலும் தடுக்கவும் முடியாது.”

அப்பாடா...... இப்ப ஹசாரேவின் எழுச்சியும் புரிந்தா உஙக்ளுக்கு.

இனி நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும்.


[டெல்லியில் ரெம்ப குளிராம். அதனால் உண்ணாவிரத இடத்தை மும்பைக்கு மாற்றிவிட்டார்கள். கம்பளிக்குள் போனால் குளிர் போய்விடும். அதற்கே பயந்தவர்களை சிறை கம்பி பின்னால் போக சொன்னால் என்ன செய்வார்கள். இணையத்தில் பதிவிட்டதுடன் கடமை முடிந்ததாய் ஓலமிடுவார்கள்.

வலியில்லா எலிகளின் சத்தம் !!!

நாங்கள் எந்த ஒரு கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், வலுவான சட்டம் இயற்றப்படவில்லை என்றால் காங்கிரசுக்கு எதிராக சேனியா காந்தி, ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு போராடலாமுன்னு ஹசாரே சொன்னாரே? அவர்கள் வீடும் டெல்லியில்தானே இருக்கின்றது. குளிருமே !!. என்ன செய்வது? அதற்க்கு இரண்டு வழிகள் இருப்பது ஹசாரே தெரியும். ஒன்று, அவர்கள் வீட்டை போராட்டக்காரர்கள் வசதிக்காக மும்பைக்கு மாற்ற சொல்லலாம். அதற்க்கு அவர்கள் மறுத்தால், இத்தாலிய சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டலாம். இரண்டாவது வழி, வீட்டையெல்லாம் மாற்ற வேண்டாம். போராட்டத்தை குளிர்
குறைந்ததும் வெயில் காலத்தில் வைத்துக் கொள்ளலாம். இதில் எது என்பதை, கோர் கமிட்டி (Core committee) முடிவு செய்யுமோ? ]

1 கருத்துகள்:

பொ.முருகன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்- 60 சமையற்காரர்கள் புடை சூழ.தேசபக்தி என்ற போர்வையில் விளம்பரபிரியர்கள்.நாடு இதையும் கடந்து செல்லும்.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்