பால்ராஜன் ராஜ்குமார்
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021
மனிதாபிமானம்
புலம்பெயர் தொழிலாளிகள்
அடிமேல் அடிவைத்து
ஆயிரம் மைல்கள் நடந்தார்கள்
ஒவ்வொரு அடியிலும்
நசுங்கி செத்தது
மனிதாபிமானம்
ஞாயிறு, 19 ஜூலை, 2020
முதிர் கன்னிகள்
இருபது வயதில்
நிகழ்காலத்தில்
எதிர் கால கனவுகள்
நாற்பது வயதில்
நிகழ் காலமே
இறந்த காலமாகிவிடும்
துணையை இழந்தால்
வாழா வெட்டி
துணையே கிடைக்காவிடில்
வாழ்வே வெட்டி
ஞாயிறு, 5 ஜூலை, 2020
ஃபேஷன்
சரிவுப்பாதை
மாடல் நடந்து வந்தாள்
அவள் உடம்பொல்லாம்
பார்வையாளர்களின்
கண்கள்
ஒட்டிக்கொண்டன
கடலலைகள்
யாரங்கே
மடித்து மடித்து
கரையில் வைத்த
அலைகளை
கலைத்துவிடுவது
அப்பாவான மகன்
இரண்டு வயதில்
நான் நீயாக
ஆசைப்பட்டேன்
உன் சட்டையை அணிந்து
உன் செருப்பின் கட்டைவிரலில்
காலையே நுழைத்து
நான் நீயானேன்
கற்பமாகாத இறகுகள்
அவள் படிப்பற்க்காக
ஆங்கில புத்தகத்தை
அத்தனை முறை திறந்ததில்லை
இன்று மட்டும்
பலமுறை பார்த்துவிட்டாள்
நேற்று வைத்த மயிலிறகு
குட்டி போட்டதா என்றறிய
இருள்
பகலைக் காண
இரவெல்லாம்
காத்திருந்தும்
பகல் வந்ததும்
பார்க்காமல்
போய்விட்டது இருள்
அடி
கிடந்த இலைமேல்
விழுந்த இலை
மொதுவாய் கேட்டது
அடி பட்டதா? என்று
காமம்
கழிப்பரை சுவரின்
கிறுக்கல்களும்
வாசகமும்
சுவரில் புணரும்
சித்திரமாய்
வழிந்துவிடுமோ
இயலாதவனின் காமம்
மரியாதை
நீ நிமிர்ந்து
நடக்கும் போது
உன் நிலழ்கூட
மண்டியிடாது யாருக்கும்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)