ஞாயிறு, 29 நவம்பர், 2015

பேச்சு



பொய் பேசுவாயா?
   ’ஆம்’ என்று 
சொன்னேன்.
    நான் பேசுவது
உண்மையா? பொய்யா?

ஆபரணம்



நம்மூரில்
   புன்னகைகூட
அணியமாட்டர்கள்
    விதவைகள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஞாபகம்


மரத்தை சுமப்பதை 
   விதைகள்
மறந்தா போகும்

வியாழன், 12 நவம்பர், 2015

பயணம்


ஓடும் பேருந்திலிருந்த
       பார்த்தேன்
பாதைகள் வேகமாய்
       பயணித்தன

புதன், 11 நவம்பர், 2015

இருப்பு

      போதி மரங்கள்
            இருந்தன
      புத்தர்தான்
            தோன்றினார்
பால்ராஜன் ராஜ்குமார்