செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேவும் ஆதித்யா டி.வியும்

பொதுவாக தினத்தந்தி போன்ற தமிழ் தினசரிகளில்,’ சிரிப்பு’க்கு என்று ஒரு சிறிய இடம் இருக்கும். ஆனால் ஆங்கில தினசரிகளிலோ பக்கம் பக்கமாய் ’சிரிப்பு’தான். அவை வெளியிடும் அன்னா ஹசாரேவின் செய்திகளை படித்தால் பக்கத்திற்க்கு பக்கம் ’சிரிப்பு’தான். அதுவும் தினமும் தொடராய் படித்தால் ஒரு நல்ல பொழுது போக்குதான்.

அவர்கள் சீரியசாய் உண்ணாவிரதம் இருப்பது என்ன ஜோக்கா?னு நினைக்கலாம். அதை அவர்களின் அறிக்கையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். முதலில், சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரே பற்றி பார்ப்போம். எங்களுடைய உண்ணவிரத கோரிக்கைகளை (அதாவது 22 கண்டிசன்கள்) அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றார். கப்புனு தூக்கி திகாரில் (நியூசென்ஸ் கேசில்) போட்டவுடன், அரசு சொன்ன ‘எத்தனை நாட்கள், எந்த இடம்....’ என்ற கண்டிசன்களுடன் உண்ணவிரதம் ஆரம்பம். 15 நாட்களுக்கான அனுமதி வாங்கி கொண்டு, மேடையில் உட்கார்ந்தவுடன் விட்ட முதல் முழக்கமே ‘சாகும் வரை உண்ணவிரதம்’. சிரிப்பு வந்தால் சிரித்துவிடுங்கள். இதற்கு இடையில் ’அன்னா ஹசாரே ஜெயிலைவிட்டு வர மறுப்புனு...’ டிராமாக்குள் ஒரு குட்டி டிராமாவேற.


எனக்கு பின்பும் இந்த போராட்டத்தை இளைஞர்கள் எடுத்து செல்ல வேண்டும். (அதாவது அவர் ஊழலுக்கு எதிராய் இப்போது இருக்கும் உண்ணாதவிரதத்தில் உயிர் விட்டுவிடுவாராம்). ஆனால் அன்னா ஹசாரே குழுவிலுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் என்னாடாவென்றால், ‘அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாதவிரதம்’ என்று எங்குமே எப்போதுமே சொன்னதில்லைனு ஜோக் அடிக்கின்றார்.


எங்களுடன் பேச வேண்டும் என, அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே குழு, கெடு விதித்துள்ளது.

இதை படிக்கும் பொது, வடிவேலு ஜோக்தான் ஞாபகத்திற்க்கு வருகின்றது. வடிவேலுவின் குழு, ஒரு பையனை செடப் செய்து, வரும் வாகனங்களில் குறுக்கே விழச்செய்து காசு பறிப்பதுதான் திட்டம். அப்போது பைக்கில் வரும் நகைவியபாரியின் பைக்கில் விழ முயற்சி சொய்வார்கள். அப்போது நடக்கும் உரையாடலில், வடிவேல், வியபாரியிடம் பையில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று கேட்பார். அதற்கு, வியபாரி, ’10000 ரூபாய்’ என்பார். உடனே, வடிவேலுடன் இருப்பவர் சொல்லுவார், ‘அண்ணே அது பத்தாதுணே”. இதை கேட்ட வியபாரி, ‘நான் எங்கடா கொடுப்பேன்னு சென்னேன்’பார். திருட்டு தொழிலில் அது ஒருவிதமான டெக்னிக். அது மாதிரி, அன்னா ஹசாரேவுடன் போச்சுவார்த்தைக்கு நிறைய பேர் வரிசைகட்டி நின்றதுமாதிரி, அதில் மன்மோகன் சிங்கையும் ராகுலை மட்டுமே அனுமதித்த மாதிரி இருக்கின்றதை படிக்கும் போது உங்களுக்கும் வடிவேல் ஜோக்தானே ஞாபகத்திற்க்கு வருகின்றது.


ஹசாரே குழுவிலுள்ள மற்றுமொருவர் கிரண் பேடி. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற (சோப்பு விளம்பரத்தில் நடித்த முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற) பெருமையுடையவர். இவர் 35 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாக பணியாறியவர். இவர் இப்போது, ‘போலீஸ் படை அரசியல்வாதிகளின் கைக்குள் இருக்கின்றது. அரசியல்வாதிகள் சொல்லுவதைதான் போலீஸ் கேட்கின்றார்கள்’னு அறிக்கை விடுகின்றார். இவர் பணியற்றிய போது போலீஸ் படை என்ன அரசியல்வாதிகளின் கைக்குள் இல்லாமல், டெல்லியில் பானிபூரி விற்பவரின் சட்டை பாக்கெட்டிலா இருந்தது. அது போகட்டும், அடுத்து சொல்லுவதை பார்ப்போம் – ‘அரசியல்வாதிகள் சொல்லுவதைதான் போலீஸ் கேட்கின்றார்கள்’. இவர் சர்வீசில் இருக்கும் போது யார் செல்லுவதை கேட்டார்? அரசியல்வாதியல்லாமல், பக்கத்துவீட்டு சொர்ணாக்கா சொல்லியதையா கேட்டார்?.

இப்படி அன்னா ஹசாரே குழுவிலுள்ளவர்கள் ஆளாளுக்கு ‘ஜோக்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுநாள்வரை, ரிலாக்ஸ் பண்ணவேண்டுமென்றால், ஆதித்யா டி.வியை பார்ப்பேன். காமெடி சீன்களை கொஞ்ச நேரம் பார்த்தாலே போதும். ஆனால் இப்போதெல்லாம், அன்னா ஹசாரே பற்றிய செய்தியை படித்தாலே மனது, உடம்பு, எல்லாமே ரிலாக்ஸ் ஆகிவிடுகின்றது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் வலைப்பதிவை பார்த்து படிச்சதுதான் எனக்கு காமெடி ஆக இருந்தது. ......உலகத்தை ரொம்ப தொலை நோக்காக பார்க்கிறீங்க ?

பெயரில்லா சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

CLICK AND READ

>>> அன்னா ஹஸாரேயின் மறு முகத்தை பார்ப்போமேயனால் அது பெரும்பாலோர்களுக்கு அதிச்சியாகவோ ஆச்சர்யமாகவோ இருக்ககூடும்.காவியை மறைக்கும் வெள்ளை. அன்னா ஹஸாரே . <<<

.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்