வியாழன், 23 ஜூன், 2011

காய்கறியும் கருவாடும்

இன்று ஸ்பீடு போஸ்ட் (Speed Post) அனுப்ப கே.கே. நகர் தபால் அலுவலகத்திற்க்கு சென்றேன். காலையில் சீக்கிரமே சொன்றேன். எப்போதும் காலையில் அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனால் இன்று கூட்டமாயிருந்தது. சென்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஒரமாய் நிறுத்திவிட்டு, கையிலிருந்த தபாலில் அனுப்ப வேண்டிய கவரை எடுத்து கொண்டு தபால் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன். நான் முதலில் பார்த்தது, எங்கள் ஏரியா போஸ்ட்மேன் பாக்கியநாதனைத்தான். அவரை பார்தவுடன் எனக்கு அதிர்ச்சி. எப்போதும் யூனிபார்மில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, அவரை, அந்த நிலைமையில் நான் எதிர்பார்கவில்லை. அப்போதுதான், கூட்டத்திற்க்கான காரணமும் விளங்கியது. போஸ்ட்மேன் பாக்கியநாதன் லுங்கி பனியன் அணிந்து, அவர் முன்னால் கூடை கூடையாக குவிந்து கிடந்த காய்கறிகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார். அதிர்ச்சியில் நான் அப்படியே அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்தான் என்னை பார்த்து,
‘என்ன சார் காலையிலே?’னு கேட்டார்.

நான் சுயநினைவு வந்தவனாய், ‘ஸ்பீடு போஸ்ட் அனுப்ப வந்தேன்’னு சொன்னேன்.

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, ‘என்ன பாக்கியநாதன் சார், நீ..ங்..க..ள்...?’.

‘என்ன சார் , காய்கறி வியாபாரமா?. இது புது ஸ்கீம் சார். போன வாரம்தான் போ
ஸ்ட் மாஸ்டர் ஜெனரல் துவங்கிவைத்தார். ஒரு வாரத்தில் நல்லா பிக்கப் ஆகி விட்டது. சொல்லப் போனால் அண்ணா நகர் போஸ்ட் ஆபிஸைவிட நாங்கள்தான் காய்கறி வியபாரத்தில் டாப். அவர்கள், இன்னமும், ஸ்டாம்பும், இன்லேண்டும்தான் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.’

‘....?’

’இன்னும் கொஞ்ச நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் வேன் வரும். பிரஷ் காய்கறி வந்தவுடன் கூட்
டம் சமாளிக்க முடியாது.’

‘சரி சார். போஸ்டல் டெலிவரியொல்லாம்.......’

‘நான் பத்து மணிக்கு வியாபாரத்தை ராமநாதனிடம் பார்க்க சொல்லிவிட்டு, டெலிவரிக்கு யூனிபார்மில் போய்விடுவேன்’

‘சரி சார். நான் ஸ்பீடு போஸ்ட் அனுப்பிவிட்டு கிளம்புகின்றேன்’ னு கவுண்டரை நோக்கி நகர்ந்தோன்.

அங்கு இருக்கும் மேடத்தை காணவில்லை. சீட் காலியாக இருந்தது. நான் திரும்பவும் பாக்கியநாதனிடம் வந்து கேட்டேன். அதற்க்கு அவர் பதில் சொல்லாமல், எதிர் திசையில் கையை காண்பித்தார். அங்கே, அந்த மேடம், கருவாடு வியபா
ரத்தில் இருந்தார்கள். வியபாரம் ரொம்ப டல் போல, கருவாட்டு மேலே இருந்த ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் இருக்கும் இடத்திற்க்கு சென்றேன். என்னை பார்த்து, கருவாடு வாங்க வந்த கஸ்டமர்னு நினைத்து, ‘சார் நெத்திலி நல்லாயிருக்கு சார்’னு கையில எடுத்து காண்பித்தார்கள். அதற்க்கு நான்,

‘மேடம், ஸ்பீடு போஸ்ட் அனுப்பணும், நீங்கதான் பாத்துகிறீங்களா?”

‘ஆமா...ஆமா. கவுண்டரில் யாருமே இல்லைனு. கருவாட்டுக்கு வந்தேன்“ னு உடனே எழுந்து வந்தார்கள்.

கவருடன் காசையும் கொடுத்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நான் அனுப்பும் தபால், என்னுடைய நண்பனுக்கு. அவன் சேலத்தில் இருக்கின்றான். சுத்த சைவம். இந்த கருவாட்டு வாடை, கவருடன் சேலம்வரை சென்றால், அவன் பாடு திண்டாடம்தான்.................................

ஹா....ஹா......னு அடக்க முடியாமல் வாய்விட்டு சத்தாமாய் சிரித்ததை கேட்டு சமையலறையிலிருந்து என் மனைவி ஹாலுக்கு வந்து,காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த எனக்கு
என்ன ஆகிவிட்டது என்று கேட்டார்கள்.

அதற்கு, நான் கற்பனையில் நினைத்த மேல் சொன்ன சம்பவத்தை சொன்னேன்.

‘போஸ்ட்டாபீசுக்கும் காய்கறிக்கும் என்ன சம்பந்தம்?’

“இந்தா பேப்பரை படி. போஸ்ட் மாஸ்ட் ஜெனரல், போஸ்ட் ஆபிஸில் வாட்ச் வியபாரத்தை துவக்கி வைத்தாராம். இதற்க்கு முன்பு, தங்கம் விற்பனையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு ஷேர் மார்கட் அப்பிளிகேஷன், இன்சூரன்ஸ், VIT நுழைவு தேர்வு விண்ணப்பம்....இப்படி பல...பல. இது இப்படியே போனால் என்னவாகும்னு நினைத்தேன். சிரிப்பாக வந்தது.”

’அவங்களுந்தான் எ
ன்ன பண்ணுவார்கள்?. ஈ மெயில், கூரியர்னு வந்தபின், எதாவது செஞ்சாதானே பிழைக்க முடியும்.”

‘ ‘
‘நாளையிலிருந்து காலையில் வாக்கிங் போயிட்டு வரும் போது, அப்படியே, போஸ்ட்டாபிசில் காய்கறியும் வாங்கி வந்திடுங்கள்.”

“!!!!!! ?????”





[போஸ்ட் ஆபிசில்.........வாடாத பச்சை காய்கறியும், காய்ந்த கருவாடும்....
நடந்தாலும் நடக்கும்.......











போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு. ராமனுஜமும், HMT அதிகாரிகளும்.

( படமும், செய்தியும் - நன்றி: த ஹிந்து நாளித
ழ்
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2127615.ece) ]



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்