புதன், 25 ஜனவரி, 2012

மெல்ல நகரும் நாட்கள்

நாடு இரண்டாயிருக்கின்றது
உண்ணாவிரதம் இருப்பவர்கள்
உணவில்லாமல் இருப்பவர்கள்

உங்களுக்கு தெரியுமா?
இந்த இரண்டையும்
நான் விரும்பவில்லை என்று

ஊழல் இரண்டாயிருக்கின்றது
லஞ்சம் கொடுப்பவன்
லஞ்சம் வாங்குபவன் என்றல்ல

ஒரு ரூபாய் வருமானத்தில்
கோடி செய்தவர்கள்
ஊழல் ஒழிக என்று சொல்லி
ஊழல் செய்யும் பூசன்கள்
.

நாடு இரண்டாய் இருக்கின்றது
உங்களுக்குத்தான் தெரியுமே
இந்த இரண்டையும்
நான் விரும்பவில்லை என்று.

1 கருத்துகள்:

Marc சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை அருமை.வாழ்த்துகள்

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்